தற்போது இவ்வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த, சென்னை கொரட்டூர் அண்ணாநகரில் தற்போது வாடகை ஆட்டோ ஓட்டி வரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த பாபு (32) என்பவரையும், அண்ணாமலைநகரில் கோழி கறிக்கடை வைத்துள்ள சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட இருவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சுமார் சத்தியா, சாக்கோட்டை ராஜா, சங்கர்லால், லெஃப்ட் செந்தில், யானை கார்த்தி உள்ளிட்ட 17 பேர் சேர்ந்து இந்த இரட்டை கொலை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.