மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் குட்டையில் இறந்து கிடந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம், போட்டோகோடியா கிராமத்தைச் சேர்ந்த கிரிஜன் முர்முர் (44) என்பவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் வேலைபார்த்துள்ளார். பின்னர்

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 1:02 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே அனல் மின்நிலையித்தில் பணியாற்றி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம், போட்டோகோடியா கிராமத்தைச் சேர்ந்த கிரிஜன் முர்முர் (44) என்பவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் வேலைபார்த்துள்ளார். பின்னர் அவர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கும் சென்று திரும்பி வந்து வேலை கேட்டுள்ளார். வேலை வழங்கப்படாததால், சுற்றி திரிந்து வந்த கிரிஜன் முர்முர் மின்நிலையத்திற்கு செல்லும் வழியில் குட்டியாண்டவர் கோயில் அருகே உள்ள பக்கங்காம் கால்வாய் குட்டையில் மர்மமான முறையில் திங்கள்கிழமை காலை இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.