மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 23 பயணிகள் காயம்

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஏ.மண்டபம் எனுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 பயணிகள் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஏ.மண்டபம் எனுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து கவிழுந்ததும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இவ்விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார் (38), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), இவரது மனைவி வினோதா (27), திருவிடைமருதூரைச் சேர்ந்த மாரியப்பன் (34), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகாதேவன் (39), தஞ்சாவூரைச் சேர்ந்த குருபிரசாத் (18), அவரது தந்தை சுப்பிராஜ் (50), தாயார் சென்பகவள்ளி (43) உள்ளிட்ட 23 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.