ஆனால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி அலுவலக நிமித்தமாக சென்னை சென்றிருந்ததால், மனுவை பெற்றுக் கொள்ள யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலக வளாக கதவை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று அனைவரும் கலைந்து சென்றனர். வீராணம்ஏரியிலிருந்து வருகிற செப்.14-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.