முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதி டிரைவர் சாவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில், காரை ஓட்டிச் சென்ற டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணித்த

News image
Updated On :12 செப்டம்பர் 2014, 12:06 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில், காரை ஓட்டிச் சென்ற டிரைவர் உயிரிழந்தார். காரில் பயணித்த இருவர் காயம் அடைந்தனர்.
ராஜபாளையம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அ.தனசேகரன் நாடார் (65). இவரது மனைவி தாமனி. இருவரும் தங்களது காரில், டிரைவர் ஒருவரை போட்டு மதுரைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் ராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையம், செல்லையா மகன் சித்திரை (44) செல்போன் பேசிக் கொண்டே காரை ஓட்டி, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியுள்ளார். இதில் சித்திரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த தனசேகரன் மற்றும் தாமனி ஆகியோர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தனசேகரன், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.