/

ஷார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

News image
Updated On :12 செப்டம்பர் 2014, 4:54 am

சீனிவாசன்

கோவை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்தவர் தாசாத் (30). இவர், இன்று அதிகாலை 4 மணி அளவில் ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் கோவை விமான நிலையம் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த சூட்கேஸைச் சுற்றி, தகரம் போல் தங்கத்தை மறைத்து வைத்து வந்ததை சுங்கத் துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.