முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக்

News image
Updated On :13 செப்டம்பர் 2014, 12:04 pm

கோ.ஜெயக்குமார்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் வாரிசுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக் கொண்டிருந்தார். வேன் ரைட்டன்பட்டி தெருவில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு திருப்பத்தில் திரும்பும் போது, சாக்கடையில் இறங்கி கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டி வந்த மதிசந்திரன், மோட்சமேரி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து மோட்சமேரியின் வாரிசுதாரர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், மோட்சமேரியின் வாரிசுதாரருக்கு ரூ.6.65 லட்சத்தை இழப்பீடாக ராஜபாளையம் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.