விக்கிரம சோழனும், சிதம்பரமும்: முதலாம் குலோத்துங்கனின் மைந்தனான விக்கிரம சோழன், சோழ தேசத்தை கிபி 1118-1135ல் ஆட்சி செலுத்தியவனாவான். சிதம்பரத்தில் அபோது இருந்த சோழ அரண்மனையில் தங்கி தில்லை ஆடல்வல்லானை வணங்குவதிலேயே பெரும் விருப்பம் கொண்டவனாக இருந்தான். தன் தாயார் தியாகவில்லியின் பெயரால் நிலம் வாங்கி, அந்நிலத்திற்குரிய வரியை நீக்கி தில்லை வாழ் அந்தணர்களுக்கு நான்கு வீதிகளிலும் மனை கட்டி கொடுத்தவன் விக்கிரம சோழன். தில்லைக் கோயிலின் திருச்சுற்று மதில் அவனது காலத்தில் கட்டப்பட்டது. மேலும் இப்போது சோழனின் படைத்தளபதியாக இருந்த நரலோகவீரன் என்று சிறப்பிக்கப்பெற்ற அரும்பாக்கிழவன் மணவிற்கூத்தன் காளிங்கராயன், சோன் இடப்ப பணியை நிறைவேற்று வகையில் சிவகங்கை தீர்த்தகுளத்தை கருங்கற்களால் அமைத்தான். சிவகாமி அம்மன் கோயிலை தனிக்கோயிலாக கட்டினான். சோழர்கள் அமைத்த நீர்வழி சுரங்க வடிகாலை நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மீண்டும் கிபி 14-15 நூற்றாண்டுகளில் புதுப்பித்துள்ளனர். இதனையே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. கிபி 1891, 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கின் போது இச்சுரங்க நீர்வழிப்பாதை தூர்வாரப்பட்டுள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.