எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காஷ்மீர் நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை அளிக்க பேரூராட்சி பணியாளர்கள் முடிவு

சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் பேசுகையில்: வெள்ளத்தின் சீற்றத்தால் காஷ்மீர் பேரழிவைச்

Updated On :14 செப்டம்பர் 2014, 2:41 pm IST

காஷ்மீர் நிவாரணத்திற்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரிடம் வழங்க தமிழ்நாடு பேரூராட்சி பணியார்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் பேசுகையில்: வெள்ளத்தின் சீற்றத்தால் காஷ்மீர் பேரழிவைச் சந்தித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இருப்பிடங்களைவிட்டு இடம் பெய்ர்ந்துள்ளனர். இந்த இயற்கைப் பேரழிவை, தேசிய பேரிடர் என பிரதம்ர் அறிவித்துள்ள நிலையில், சக குடிமக்களின் துயரத்தைப் போக்க தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பா.ராஜேந்திரசோழன் உரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காஷ்மீர் நிவாரண நிதிக்கு செப்டம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை அளிப்பது.சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட துணைத் தலைவர் த.பிலிப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.