ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கழிவுநீர் கலந்த குடிநீர்: சிதம்பரத்தில் மக்கள் சாலைமறியல்

சிதம்பரம் 3-வது வார்டில் நந்தவனம், மீனவர்காலணி உள்ளிட்ட தெருக்களில் குடிநீர், புதை சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து கடந்த மாதம் அப்பகுதி மக்கள் சிதம்பரம்

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 1:13 pm

ஜி.சுந்தரராஜன்

கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்து சிதம்பரத்தில் 3-வது வார்டு மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் 3-வது வார்டில் நந்தவனம், மீனவர்காலணி உள்ளிட்ட தெருக்களில் குடிநீர், புதை சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து கடந்த மாதம் அப்பகுதி மக்கள் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்து வலியுறுத்தினர். தொடரந்து அப்பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வியோகம் செய்யப்படுதால், ஆத்திரமடைந்த அந்த வார்டு மக்கள், பாட்டாளி மக்கள் கட்சி நகர இளைஞரணி நிர்வாகி ஐயப்பன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வடக்குமெயின்ரோட்டில் கடலூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் சென்று அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.