டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த வேளாண்மை சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட

News image
Updated On :16 செப்டம்பர் 2014, 10:31 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மர்ம நபர்கள் நடத்திய கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த வேளாண்மை சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் உறுப்பினர்களாக இருந்து விவசாய கடன், நகை கடன் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திங்களன்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் கிரில் கேட்டை உடைத்து அலுவலகத்தின் மரக்கதவை உடைக்க முயன்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே இந்த கடன் சங்கம் இருப்பதால் அவ்வழியே ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை கண்டதும் கொள்ளை முயற்சியை கைவிட்டு திருடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து திங்களன்று காலை அலுவலர்கள் வந்து பார்த்த போது கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பதை கண்டு இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.