விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கார் மீது தாக்குதல்: 4 பேர் கைது
சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் கார் மீது மர்மநபர்கள் தாகுத்தல் நடைபெற்றுள்ளது


சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் கார் மீது மர்மநபர்கள் தாகுத்தல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து புவனகிரி போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள வ.க.செல்லப்பன், திங்கள்கிழமை இரவு சிதம்பரம் அருகே நாலாந்திட்டு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியுள்ளார். அப்போது அழிச்சிக்குடி புதுவாய்க்கால் அருகே மறைந்திருந்த மர்மநபர்கள் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காரின் முன்புறக்கண்ணாடி உடைந்து சேதமுற்றது. இதுகுறித்து வ.க.செல்லப்பன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (22), அருண் (20), இமானுவேல் என்கிற பார்த்தசாரதி (19), தருமவேல் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் புவனகிரி போலீஸார் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...