முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்திற்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (35). இவர் பால் கறந்து, அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கும் வேலை செய்து வந்தார். 6.11.2007-

News image
Updated On :16 செப்டம்பர் 2014, 12:04 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரியின் குடும்பத்திற்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (35). இவர் பால் கறந்து, அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கும் வேலை செய்து வந்தார். 6.11.2007-ம் தேதி சைக்கிளில் மாத்தூர்-மகாராஜபுரம் சாலையில் நரி ஓடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் தீப்பெட்டி ஆலை வேன் மோதியதில் மாசிலாமணி உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது மனைவி சுந்தரம்மாள் (34), மகன்கள் மணிகண்டன் (12), மணி (10), மகள் செல்வி (7), தாய் அந்தோணியம்மாள் ஆகியோர் சார்பில் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.வி. சந்தோஷம், சிவகாசி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மாசிலாமணியின் வாரிசுதாரருக்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.