ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கீழே கிடந்த 41 கிராம் செயினை போலீஸாரிடம் ஒப்படைத்த பள்ளி ஆசிரியர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் உ.கருணாகரன் (30). இவர் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பாட

News image
Updated On :18 செப்டம்பர் 2014, 12:19 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சாலையில் கீழே கிடந்த 41 கிராம் தங்க செயினை, கண்டெடுத்த பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் உ.கருணாகரன் (30). இவர் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் வியாழக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த தனது நகையை மீட்க சென்றுள்ளார்.

அப்போது கடைவீதியில் சாலையோரம் கீழே 41 கிராம் தங்க செயினை கிடப்பதை பார்த்து, அதனை எடுத்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கரிடம் அளித்து, நகைக்கு உரியவரை கண்டுபிடித்து வழங்குமாறு தெரிவித்துள்ளார். ஆசிரியரின் நேர்மையையும், கடமை உணர்வையும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பாராட்டி, நிச்சயம் இவரால் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் நகை கண்டெடுத்த விபரத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். நகையை தவறவிட்டு அலைந்து கொண்டிருந்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், சேத்தியாதோப்பு ஆட்டோ நிறுத்தத்தில் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பேஸ்புக்கில் இன்ஸ்பெக்டர் நகை கண்டெடுத்த விபரத்தை வெளியிட்டுள்ளார். எனவே அவரை சென்று பார்க்கவும் எனக்கூறியுள்ளனர். பின்னர் மதிவாணன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரை சந்தித்து தவறவிட்ட நகையை பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக உள்ள மதிவாணன் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் வங்கியில் நகையை அடமானம் வைக்க வந்த போது தவறவிட்டுள்ளார். அப்போது நகையை மீட்க அங்கு வந்த அரசு பள்ளி ஆசிரியர் கருணாகரன் அதனை கண்டெடுத்து காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.