கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் மகன் முகமது யூசுப் (51). இவர் கிறிஸ்தவ பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். 17.3.2008-ம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.கூமாப்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் முகமது யூசுப் தொழுகை செய்ய வருவது ஜமாத்தின் பொறுப்பாளர்களுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஜமாத்தின் கௌரவத் தலைவர் ம.வாவா ராவுத்தர் (எ) முஸ்தபா ராவுத்தர், கூமாப்பட்டி முஸ்லீம் ஜமாத் தலைவர் பீ.அமீர், பொருளாளர் உ.ஜூயாவுதீன், உறுப்பினர்கள் யூ.இனையத்தல்லா, கோ.பிச்சை, யூ.முகமது நாஸர் ஆகியோர் சேர்ந்து முகமது யூசுப்பை ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளார்கள். மேலும் ஜமாத்தைச் சேர்ந்த யாரும் இவருடன் அன்னம், தண்ணீர் புழங்கங் கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் போட்டுள்ளார்கள்.