முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு: இரு இடங்களில் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், நகராட்சியின் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சீராக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி இரு இடங்களில் திடீர் சாலை மறியில் நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2014, 8:27 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், நகராட்சியின் குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நகராட்சி சீராக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி இரு இடங்களில் திடீர் சாலை மறியில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. அக்கினி நட்சத்திர வெயிலைவிட வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. நகரில் 75 சதவீதத்தினர் வீடுகளில் போர்களில் தண்ணீர் இல்லை. பணம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கிடைக்கும் என்றால், அதற்கும் ஒரு நாள் முன்னதாகவே சொன்னால்தான் தண்ணீர் கிடைக்கும் நிலை.

இந்நிலையில் நகராட்சியின் குடிநீர் ஆதாரமான பேயனாற்றுப் படுகையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சராசரியாக கிடைக்க வேண்டிய தண்ணீரை விட பாதி அளவே கிடைக்கிறது. இதிலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுவிட்டால், அதனை கண்டுபிடித்து செப்பனிட்டு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால் நகரில் நகராட்சியால் சீராக குடிநீர் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் தினமும் தங்களுக்கு நகராட்சி குடிநீர் தரவில்லை என்று கூறி திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நகராட்சி 3-வது வார்டு பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாதாங்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 நாட்களாக நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பஸ்நிலையில் முன்பு காலி குடங்களுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் நிலையத்திற்கு வந்து பேசும்படி கூறினார்கள்.

இதற்கு எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டி, ஆட்சேபம் தெரிவித்து நகராட்சி அலுவலர்கள் இங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார். டி.எஸ்.பி. முரளிதரன் சம்பவ இடத்திற்கு வந்து மாலை 5 மணிக்குள் குறிப்பிட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், தண்ணீர் கஷ்டம் கடுமையாகத்தான் உள்ளது. இருந்தாலும், நகராட்சி ஆணையாளர் மற்றும் குடிநீர் விநியோக மேற்பார்வையாளரின் அலட்சியத்தால்தான் நகரில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிடைக்கும் நீரை பகர்ந்து அளித்து நிர்வாகம் செய்ய இவர்களால் இயலவில்லை. இவர்களால் தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.