முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் கொடூர கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாயின் தென்கரைக்கு கீழ் ஒரு பெண் சடலம் கிடப்பதாய் கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்திக்கு செவ்வாய்கிழமை தகவல் வந்தது. அதன் பேரில்

News image
Updated On :23 செப்டம்பர் 2014, 12:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, பாதி எரிந்த நிலையில் கிடைந்தது செவ்வாய்கிழமை தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாயின் தென்கரைக்கு கீழ் ஒரு பெண் சடலம் கிடப்பதாய் கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்திக்கு செவ்வாய்கிழமை தகவல் வந்தது. அதன் பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது சுமார் 55 வயது மதிக்கத் தக்க பெண், அரக்குக் கலர் ஜாக்கெட், ஊதா கலர் பாவடை, சந்தனக் கலரில் ஊதா பூப்போட்ட சேலை கட்டியநிலையில் சடலமாக கிடந்தார். அவரது முகத்திலும் தலையின் பின் பகுதியிலும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. மேலும் வலது முகம், நெஞ்சு, வயிறு பகுதிகல் பாதி எரிந்த நிலையில் இருந்தது.

இது குறித்து இந்திராகாந்தி, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.