சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் காயம்

சாத்தூர் அருகே உள்ள சேதுராமலிங்கம் பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடி மருந்து உராய்வின் காரணமக ஒரு அறையில் தீ பற்றியது
Published on
Updated on
1 min read

சாத்தூர் அருகே உள்ள சேதுராமலிங்கம் பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடி மருந்து உராய்வின் காரணமக ஒரு அறையில் தீ பற்றியது

இந்த தீ விபத்தில் விஜயகரிசல் குளத்தை சேர்ந்த அழகு மீன்ராஜ்(45) கோட்டையூரை சேர்ந்த தவசியம்மாள் (40) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தவசியம்மாளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும்,, அழகு மீன்ராஜ் என்பவரை சிவகாசி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் டிஎஸ்பி அறிவானந்தம் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com