அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு இருந்த அரிசி லாரி கடத்தல்

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு 25 கிலோ எடையுல்ள 680 அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை டிரைவர் ராமசந்திரன்(55) பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில்

News image
Updated On :30 செப்டம்பர் 2014, 9:37 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் சோதனைச் சாவடியில் ஆவணங்களை சரிபார்க்க நிறுத்தப்பட்ட அரிசி ஏற்றி வந்த லாரியை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை கடத்தி சென்றனர்.

ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு 25 கிலோ எடையுல்ள 680 அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை டிரைவர் ராமசந்திரன்(55) பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஆவணங்களை சரிபாக்க சென்று திரும்பி வந்து பார்க்கையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாதர்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று கேட்பாரற்று கிடந்த நிலையில் அங்கு சென்று பார்த்த போது அது கடத்தப்பட்ட அரிசி லாரி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை எடுத்து சென்றார்.

பெத்திக்குப்பத்தில் இருந்து லாரியை கடத்திய நபர்கள் எங்கே பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் 16 கி.மீ தொலைவில் உள்ள மாதர்பாக்கம் வரை சென்று அங்கு லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.