பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முன் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் ஓரிரு நாள் தண்ணீர் திறப்பு?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக

News image
Updated On :2 ஏப்ரல் 2015, 1:11 pm

ஷேக் அப்துல்காதர்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வடகிழக்கு பருவத்தில் இயல்பான மழையை விட கூடுதலாக  பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் 6 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பிசான பருவத்தில் முழு அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

பிசான அறுவடை முடிந்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 89.07 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.75 அடியாகவும் இருப்பதால், முன்கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும் வகையில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ஒரு சில தினங்களில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவ்வாறு தண்ணீர் திறப்பதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய்,வடக்கு பிரதான கால்வாய் பாசனத்தில் 8,124 ஏக்கர் நிலங்களில் முன் கார் பருவம் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.மணிமுத்தாறு அணை மூடப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருப்பதால் இந்த அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெற்று வரும் 2856 ஏக்கர் நிலங்களுக்கும் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 26.80 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 26.99 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 13.12 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 12 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 34 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.09 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.

இதனிடையே வியாழக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 8.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 13 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 19 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 13 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.