/

மருங்கூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு பழுது: மக்கள் அவதி

பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்டு மருங்கூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2015, 6:40 am

சீனிவாசன்

பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்டு மருங்கூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இங்கிருந்த 3 ஆழ்துளை நீர்மூழ்கி கிணறுகள் பழுதடைந்ததால் தண்ணீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள ஒரு மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதாலும், 3 மணி  நேரமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாலும், தண்ணீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பன்ருட்டி ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என பன்ருட்டி ஊராட்சி ஒன்றிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.