பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சுதந்திர தினம் முதல் விருதுநகர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பாலித்தீன் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற


சுதந்திர தினம் முதல் விருதுநகர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பாலித்தீன் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப் படி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணியை நடத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தார்கள்.
மம்சாபுரம் பேரூராட்சி 1-வது வார்டில் உள்ள நரையன்குளம ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் தலைமை ஆசிரியை ஜெஸிந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை பாலித்தீன் ஒழிப்பு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிராமத்தில் வீடு வீடாக விநியோகித்தனர்.
பேரணியில் ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், செ.சண்முகநாதன் மற்றும் மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...