ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பணியிலிருந்த காவலரைத் தாக்கிய இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியிலிருந்த போக்குவரத்துக் காவலரைத் தாக்கி காயப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2015, 6:24 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியிலிருந்த போக்குவரத்துக் காவலரைத் தாக்கி காயப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருத்தங்கல் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார். இவர் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, தம்பிபட்டி பிள்ளையர் கோவில் சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூராக நின்று கொண்டிருந்த தம்பிபட்டி, கீழத்தெரு, நடராஜன் மகன் முத்தையா (37) மற்றும் கேரளா மாநிலம் இளம்பாறை கிராமத்சைச் சேர்ந்த முத்தையா மகன் தங்கபாண்டி (30) ஆகியோரை கண்டித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து காவலரை கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி, ஆபாசாமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்த காவலர் முத்துக்குமார், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.