பணியிலிருந்த காவலரைத் தாக்கிய இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியிலிருந்த போக்குவரத்துக் காவலரைத் தாக்கி காயப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியிலிருந்த போக்குவரத்துக் காவலரைத் தாக்கி காயப்படுத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தங்கல் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார். இவர் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, தம்பிபட்டி பிள்ளையர் கோவில் சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூராக நின்று கொண்டிருந்த தம்பிபட்டி, கீழத்தெரு, நடராஜன் மகன் முத்தையா (37) மற்றும் கேரளா மாநிலம் இளம்பாறை கிராமத்சைச் சேர்ந்த முத்தையா மகன் தங்கபாண்டி (30) ஆகியோரை கண்டித்துள்ளார்.
இருவரும் சேர்ந்து காவலரை கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி, ஆபாசாமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்த காவலர் முத்துக்குமார், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...