அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் வீடுகளில் நகை திருட்டு: பெண் கைது

விருதுநகர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகையை திருடியதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை பாண்டியன்நகர் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :29 ஆகஸ்ட் 2015, 10:47 am

விருதுநகர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகையை திருடியதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை பாண்டியன்நகர் காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(40). தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி உமாமகேஸ்வரியிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வார்களாம். அதையடுத்து, மாலையில் வந்து பார்க்கையில் பீரோவில் வைத்திருந்த தோடு, மோதிரங்கள் உள்ளடக்கிய இரண்டரை சவரன் நகையை காணமல் போயிருந்தது.

அதேபோல், அதற்கடுத்த வீட்டைச் சேர்ந்த சகாயராணி(39) வேலைக்கு செல்கையில் வீட்டை பூட்டிவிட்டு உமாமகேஸ்வரியிடம் சாவியை கொடுத்துச் செல்வாராம். அங்கும் மாலையில் வந்து பார்க்கையில் 3 சவரன் நகையை காணமல் போயிருந்ததாம். இது குறித்து அக்கம் பக்கத்தில் வீசாரணை செய்ததில் உமாமகேஸ்வரிதான் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்றதாக தகவல் தெரியவந்தது.

உடனே இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம், சகாயராணி ஆகியோர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் உமாமகேஸ்வரி கைது செய்து அவரிடம் இருந்து நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.