மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வாங்கியக் கடனை திருப்பித் தராத உயிர் தோழன் : ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :4 பிப்ரவரி 2015, 11:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், தன்னாசி தெருவைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ச.பிச்சைக்கனி (59). இவரும் மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அ.சேரன் செங்குட்டுவன் (59) என்பவரும் 30 ஆண்டுகள் நண்பர்கள்.

இந்நிலையில் சேரன் செங்குட்டுவன் புதிய வீடு கட்ட பிச்சைக்கனியிடம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்து நம்பிக்கை மோசடி செய்தாராம்.

இது குறித்து ஜனவரி 7-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நேரில் ஆஜராகி பிச்சைக்கனி புகார் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் போலீஸார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சேரன் செங்குட்டுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.