பாளையங்கோட்டை அருகே தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் சாவு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தாமிரவருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது மனைவி லட்சுமி சுவேதா. இத் தம்பதிக்கு குமார் (4) என்ற மகன் உள்ளார். இவன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இந்நிலையில் குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள தாமிரவருணி நதியில் குமார் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற குமார் நீரில் மூழ்கி இறந்தான். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...