தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் அதில் பயணம் செய்த தருமபுரி மாவட்டம், அதகபாடியைச் சேர்ந்த காளியப்பன் (54), இவரது மனைவி வெங்கட்டம்மாள் (50), மல்லாபுரம் சகாதேவன் (50), கம்மாளப்பட்டி மாதம்மாள் (50), அவரது பேத்தி சிவசங்கரி (10), தருமபுரியைச் சேர்ந்த மணிவண்ணன் (50), தொப்பூர் அருகே தொம்பரகாம் பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (10) தீயணைப்பு வீரர் சுதாகர் (42), இண்டூர் சுண்ணாம்புப் பாளையம் எம்.துரைசாமி (63) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.