முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்பில் யானைக் கூட்டம் புகுந்து மரங்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2015, 3:48 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காப்புக் காடு உள்ளது. இங்கு யானைகள், காட்டெருமை, மான், புலி உள்ளிட்ட விலங்குகள் உண்டு. தற்போது வெயிலின் தாக்கம் இப் பகுதியில் அதிகமாக இருப்பதால், யானைகள் கூட்டம் கூட்டமாக மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோப்புகளுக்குள் தண்ணீர் தேடி புகுந்து சேதம் விளைவிக்கின்றன. செவ்வாய்கிழமை இரவு மம்சாபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெருமாள், கோபால் என்பவர்களுக்குச் சொந்தமான தோப்புக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த மா மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்,

காட்டில் போதுமான தண்ணீர் வசதி வன விலங்களுக்குச் செய்து தரப்படாததால், யானைகள் தரைப் பகுதியை நோக்கி வருகின்றன. தோப்புகளில் புகுந்து யானைகள் மரங்களை வேரோடோ சாய்த்து விடுவதால், அடுத்த முறை காய்களை பறிக்க இயலாது. முற்றிலும் மரங்கள் சேதம் அடைந்து விடுகிறது. வனத்துறையினர், வன விலங்களுக்கு தனியார் தோப்புகளுக்குள் வந்து சேதம் விளைவிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சேதமுற்ற மரங்களுக்குக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.