மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிச்சயித்த திருமணத்தை மகள் நிறுத்திய வேதனையில் தந்தை தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில், நிச்சயக்கப்பட்ட திருமணத்தை விருப்பம் இல்லை என்று நிறுத்த நடவடிக்கை எடுத்த மகளில் செயலால் வேதனையுற்ற தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :2 ஜூலை 2015, 2:03 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், நிச்சயக்கப்பட்ட திருமணத்தை விருப்பம் இல்லை என்று நிறுத்த நடவடிக்கை எடுத்த மகளில் செயலால் வேதனையுற்ற தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சீனியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோ.பவுல் (55). இவரது மகள் விண்ணரசி, செவிலியர் படிப்பு முடித்து வேலை செய்து வருகிறார். இவருக்கும் குளச்சலைத் சேர்ந்த ஒருவருக்கும் 17.6.15-ம் தேதி திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. 6.7.15-ம் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் விண்ணரசி, தங்களது ஆர்.சி. தேவாலய பங்கு தந்தையிடம் சென்று எனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்து வேதனையுற்ற தந்தை பவுல் புதன்கிழமை விஷம் குடித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.