லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை

சூலூர் அருகே இரண்டு குழந்தைகளும், தாயும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2015, 5:28 am

மதன்

சூலூர் அருகே இரண்டு குழந்தைகளும், தாயும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியை சேர்ந்தவர் எழிலரசி (22), கோவை, மதுக்கரையை சேர்ந்தவர் நவீன் குமார் (24) இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஸ்ரீவர்த்தனி (4), தாரணி ஸ்ரீ (1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலை தாயும், இரண்டு குழந்தைகளும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததற்கான காரணம் என்ன என்பதை கணவரான நவீன் குமாரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என்ற பாணியில் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.