முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சமுதாய மோதல்கள்: பள்ளிகளுக்குச் சென்று அறிவுரை வழங்கிய போலீஸார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அண்மையில் தொடர்ந்து செய்யும் செயல்பாடுகள் சாதி மோதல்களாக உருவாகி

News image
Updated On :9 ஜூலை 2015, 10:19 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் பேருந்துகளில் மாணவர்கள் அண்மையில் தொடர்ந்து செய்யும் செயல்பாடுகள் சாதி மோதல்களாக உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க பள்ளிகளுக்கே வியாழக்கிழமை போலீஸார் சென்று மாணவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி மற்றும் தியாகராஜா மேல்நிலைப் பள்ளிக்களுக்குச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் பக்தவச்சலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகையில் கூறியதாவது:

கான்சாபுரம், கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர் தினமும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணித்து இப் பள்ளிகளுக்கு வந்து செல்கிறார்கள்.இவர்கள் செல்போன்களில் தங்களது சமுதாயத் தலைவர்களின் பாடல்களை அதிக சத்தத்துடன் வைத்துக் கேட்கிறார்கள். தங்களது சமுதாயத் தலைவர்கள் படம் பொறித்த பனியன்களை அணிந்து செல்கிறார்கள். சமுதாயம் சார்ந்த கட்சிகளின் கொடிகளில் உள்ள வர்ணங்களை கைகளில் வளையங்களாக அணிந்து செல்கிறார்கள். சமுதாயத் தலைவர்கள் பிறந்தநாளை பேருந்துகளில் கொண்டாடி இனிப்பு வழங்குகிறார்கள். மற்ற சமுதாயப் பெண்களை கேலி செய்கிறார்கள். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் சமுதாய மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.

இது போன்ற குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுவோர் யாராய் இருந்தாலும் காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாணவர்கள் படிக்கும் காலங்களில் தங்களது படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பிரச்னைக்குரிய வழித் தடங்களில் இயங்கும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு குடும்பத்திற்கும், படிக்கும் கல்வி நிறுவனத்திற்கும் நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும் என்றார் அவர்.

அப்போது சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ், தியாகராஜா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.