ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தேர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 28-வது மகா சபைக் கூட்டம், சனிக்கிழமை அதன் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஆர்.எல்.செல்வராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக கோமதிசங்கர் ஜி.குருசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக இப் பொறுப்பில் இருந்து வருகிறார். ரோட்டரி சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், ரயில்வே பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மின்சாதன வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரை அனைத்து கட்சி பிரமுகர்கள், பல்வேறு அரசு உயரதிகாரிகள், வியாபாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சங்கத்தின் பிற நிர்வாகிகள்: செயலாளர் பி.கோபால்ராஜா, பொருளாளர் ஆர்.எல்.செல்வராஜ், துணைத் தலைவர்கள் ஜி.கார்த்திக், வி.சி.வன்னியராஜ், துணைச் செயலாளர்கள் எஸ்.ராமசுப்பு, கே.சி.பி.சி.ராஜேஸ்கனி, ஆலோசகர்கள் ஆர்.ஞானம், என்.சமரசம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...