இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக ஜூன் 2-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூன் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 12 பேரும், காவல் நீட்டிப்புக்காக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிர்வாதம், மீனவர்களுடைய நீதிமன்றக் காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.