முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை

News image
Updated On :18 ஜூன் 2015, 2:06 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்து, குவாரி மேலாளரைக் கைது செய்தனர். மேலும் வெடிபொருட்களை கொண்டு வந்து பூமிக்கடியில் புதைத்து வைத்த வெடிபொருள் குடோன் உரிமையாளரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாருக்கு குறிப்பிட்ட இடத்தில் அனுமதியின்றி கிரானைட் குவாரி செயல்பட்டு வருவதாயும், அங்கே ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாயும் ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் க்யூ பிரிவு  ஆய்வாளர் சாந்தலட்சுமி, சார்பு ஆய்வாளர்கள் பாலகணேசன், அ.ராதா மற்றும் முதுநிலை காவலர் அ.பாலகணேசன் மற்றும் போலீஸார், மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமிற்கு மேற்கு பக்கம் உள்ள மதுரை கே.கே.நகர் செல்லையா மகன் சுந்தரபாண்டியன்  என்பவருக்குச் சொந்தமான பிரித்வி கிரானைட்ஸ் குவாரியில் வியாழக்கிழமை மாலை அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு தருமபுரி மாவட்டம், பொன்னகரம் தாலுகா, நெருப்பூர், வெள்ளையன் மகன் சாமியண்ணன் (49) என்பவர் மேலாளராக இருந்தார்.அவரிடம் விசாரித்தபோது, குவாரியின் உள்ளே பூமிக்கு அடியில் குழிதோண்டி பதுக்கி வைத்திருந்த அலுமினியம் சூப்பர் பிளைன் டெட்டனேட்டர் 110, டெட்டனேட்டரிங் கார்டு 600 மீட்டர், ஜெலட்டின் 131, கரி்மருந்து திரி 60 மீட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்துள்ளார்.

சாமியண்ணனிடம் மேலும் போலீஸார் விசாரித்தபோது, குவாரிக்கு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் உள்ள ஸ்ரீபாலன் எக்ஸ்ப்ளோசிவ் குடோனில் இருந்து அதன் உரிமையாளர் ராமசாமி என்பவர் கொண்டுவந்து குவாரியில் குறிப்பிட்ட வெடிபொருட்களை வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறினார்.

ஆபத்தையும், சேதாரத்தையும் விளைவிக்கக்கூடிய வெடிபொருட்களை முறையான அனுமதியின்றியும், பாதுகாப்பின்றியும் வைத்துவிட்டுச் சென்ற வெடிபொருள் குடோன் உரிமையாளர் ராமசாமி, மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த குவாரி மேலாளர் சாமியண்ணன் ஆகியோர் மீது வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் மேலாளர் சாமியண்ணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவக உள்ள ராமசாமியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.