முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மருத்துவ வட்டம், மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வெள்ளிக்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2015, 9:40 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மருத்துவ வட்டம், மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வெள்ளிக்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமை தாங்கினார்.சுகாதார ஆய்வாளர் வி.சந்திரசேகர் வரவேற்றார்.

ஆர்.ரெட்டியபட்டி, வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மந்திரகுமார் விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். நோய் பரவும் முறை, தடுப்பு முறைகள், இதற்கான மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மாணவியர், ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், ந.ரெங்கலதா, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.