முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கு: ரூ.7.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.7,24,423 இழப்பீடு வழங்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :22 ஜூன் 2015, 12:46 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.7,24,423 இழப்பீடு வழங்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம், கே.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி முத்துமாரி (40). இவர் மாடுகள் வைத்து பராமரித்து, பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார். 17.1.10-ம் தேதி தனது மகள் வளைகாப்பிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர், பூவாணியில் உள்ள உறவினர்களிடம் சொல்வதற்காக சென்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, திருச்செந்தூர், குலசேகரபட்டணத்தைச் சேர்ந்த ஜெகன்ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் முத்துமாரி மீது மோதியுள்ளது. இதில் காயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 21.1.10-ம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து முத்துமாரியின் கணவர் திருப்பதி, மகள் பாண்டியம்மாள் (21), மகன் பழனிவேல் (19) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், கோயமுத்தூரில் உள்ள இக்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாரிசுதாரருக்கு ரூ.7,24,423 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.