முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக இருந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஷ்வநாதன்

News image
Updated On :23 ஜூன் 2015, 1:54 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக இருந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஷ்வநாதன் செவ்வாய்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு, மேலப்பாளையம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஷ்வநாதன் (47).இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இப் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்களுக்கு இவர் உறுதுணையாக இருந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற போலீஸார் நேரிடையாக பார்த்துள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், வருவாய்துறையினர் கொடுத்த புகார் உள்ளிட்டவற்றின் பேரில் நடைபெற்ற துறை ரீதியான விசாரணையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள விஷ்வநாதன், மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் மனைவி பூமாதேவி (41) தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், திங்கள்கிழமை இரவு விஷ மாத்திரைகளை தின்றுள்ளார். செவ்வாய்கிழமை காலை உயிரிழந்த நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.

இது குறித்து மனைவி பூமாதேவி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.