முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு

தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து

News image
Updated On :24 ஜூன் 2015, 12:38 pm

கோ.ஜெயக்குமார்

தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் அருணாச்சலம் மகன் கரியப்பா. இவர் மீது இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊரில் நடைபெற்ற ஒரு பிரச்னை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு சாட்சியாக இதே இடத்தைச் சேர்ந்த அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளர் இ.கருப்பசாமி (32) உள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு ஊரில் உள்ள ஒரு பாலம் அருகே வந்து கொண்டிருந்த கருப்பசாமியை, கரியப்பா வழிமறித்து, குறிப்பிட்ட வழக்கில் தனக்கு எதிராக சாட்சி கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனக்கு எதிராகக் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் கரியப்பாவைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.