முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லாரியை வாங்கிக் கொண்டு பண மோசடி: மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தைத்தராமல், கேட்டுச் சென்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :25 ஜூன் 2015, 5:03 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியை வாங்கிக் கொண்டு, மீதி பணத்தைத்தராமல், கேட்டுச் சென்றபோது கொலை மிரட்டல் விடுத்ததாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் ச.வெற்றிவேல்முருகன் (24). இவருக்குச் சொந்தமான லாரியை, மதுரை, கொடிக்குளம், யானைமலை கல்குவாரியைச் சேர்ந்த ரா.செல்வம் என்பவர் 24.12.14-ம் தேதி ரூ.1.90 லட்சம் என கிரையம் பேசி, ரூ.20 ஆயிரம் முன்பணம் கொடுத்து லாரியை எடுத்துச் சென்றுள்ளார். மீதிப் பணத்தை 5.1.15-ம் தேதி தருவதாக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் சொன்னதுபோல் பணம் தரவில்லையாம்.

இதனையடுத்து செல்வத்தை நேரில் சந்தித்து பணத்தைக் கேட்க வெற்றிவேல்முருகன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த செல்வம் மற்றும் அவருடன் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகர் முருகன், இதே இடத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து, வெற்றிவேல் முருகனை ஆபாசமாகப் பேசி, பணத்தைக் கேட்டு வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்களாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வெற்றிவேல் முருகன் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் செல்வம், முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.