சாத்தூர் அருகே தாத்தவை கொன்ற பேரன்கள் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(55) இவருக்கு கருப்பசாமி(37),கனகராஜ்(40) என்ற பேரன்களும் உள்ளனர்.பால்ராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகாராறு செய்து

சாத்தூர் அருகே தாத்தாவை கொலை செய்ததாக,இரண்டு பேரன்களை அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(55) இவருக்கு கருப்பசாமி(37),கனகராஜ்(40) என்ற பேரன்களும் உள்ளனர்.பால்ராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகாராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து புதன்கிழமை இரவு வழக்கம் போல் பால்ராஜ் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.அப்போது பால்ராஜ் கத்தியால் பேரன் கருப்பசாமியை தாக்கியுள்ளார்.இதனால் ஆத்தரமடைந்த கருப்பசாமி,கனகராஜ் ஆகிய இருவரும் பால்ராஜை தாக்கியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்து பால்ராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி,கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com