தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரம்: சிபிஜ விசாரிக்க அரசுப்பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

வேளாண்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

News image
Updated On :8 மார்ச் 2015, 12:13 pm

ராதாகிருஷ்ணன்

வேளாண்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தருமபுரி பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் உதவி பொறியாளராக பணியாற்றிவர் முத்துகுமாரசாமி. அண்மையில் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் பணிபுரிந்த மாவட்டத்தில் வேளாண்துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் உள்ளடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசு ஆணைப்படி அப்பணியிடங்கழை நிரப்பியது. ஆனால், மாறாத வேளாண்துறை அமைச்சகத்திலிருந்து தாங்கள் பரிந்துரைத்த பட்டியல்படி பணி நியமனம் செய்ய வற்புறுத்தப்பட்டது.

இதனால் கடுமையான மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். வேளாண்துறை அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கோப்புகள், தொடர்வற்புறுத்தலால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தொடர்புடைவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வேளாண்துறை போன்று போக்குவரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் அரசு விதிகள் படி அதிகாரிகளை செயல்படவிடாமல், அதிகாரம் படைத்தவர்கள் தலையிடும் போக்கு உள்ளது. இதை ஆளும் அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்த வருகிற 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோல, கடந்த 4-ஆம் தேதி சாலைப்பணியாளர்களின் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அர்ஜூனன் சேலம் மாவட்டம், எடப்பாடி சிலரால் தாக்கப்பட்டார். இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிற 17-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதேபோல, அரசுப் பணியாளர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, மதுரை, கடலூர், நெல்லை, திருச்சி, தஞ்சை ஆகிய மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.