/

வணிக வரி அலுவலர் மடிக்கணினி திருட்டு

பேருந்து பயணத்தின் போது துணை வணிக வரி அலுவலரின் மடிக்கணினி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களை மர்ம நபர் திருடி சென்றதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2015, 8:55 am

சீனிவாசன்

பேருந்து பயணத்தின் போது துணை வணிக வரி அலுவலரின் மடிக்கணினி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களை மர்ம நபர் திருடி சென்றதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நெய்வேலி, இந்திரா நகரை சேர்ந்தவர் எஸ்.விஜயரங்கன்(37). இவர் விழுப்புரம் வணிகவரி அலுவலகத்தில் துணை வணிக வரி அலுவலராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டிக்கு தனியார் பேருந்தில் வந்தாராம். அப்போது அவர் எடுத்து வந்த மடிக்கணினி மற்றும் துறை சார்ந்த புத்தகங்கள் அடங்கிய பையை யாரோ திருடி சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.