பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் குளிர்பான நிறுவன விரிவாக்கம்: கண்டித்து த.மா.கா நூதனப் போராட்டம்

கங்கைகொண்டானில் தனியார் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் கறுப்புத்தணி கட்டியவாறு வந்த த.மா.கா. இளைஞரணியினர் திங்கள்கிழமை குளிர்பானத்தை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 மார்ச் 2015, 10:45 am

ஷேக் அப்துல்காதர்

கங்கைகொண்டானில் தனியார் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் கறுப்புத்தணி கட்டியவாறு வந்த த.மா.கா. இளைஞரணியினர் திங்கள்கிழமை குளிர்பானத்தை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் குளிர்பான நிறுவனம் விரிவாக்கம் செய்யவும், புதிய குளிர்பான ஆலை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் வந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் தனியார் குளிர்பான நிறுவனங்கள் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீரை தாமிரவருணி நதியிலிருந்து எடுத்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர், பாசனத் தேவையை பூர்த்தி செய்து வரும் தாமிரவருணி நதி வற்றாத ஜீவநதியாக திகழ்ந்து வருகிறது.

தொடர்ந்து தாமிரவருணியிலிருந்து நீரை உறிஞ்சினால் இவ்விரு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படவாய்ப்புள்ளது. ஆகவே புதிய குளிர்பான நிறுவனம் அமைக்கவும், குளிர்பான நிறுவன விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய உ. ராஜீவ்காந்தி உள்ளிட்ட இளைஞரணியினர் வாயில் கறுப்புத்துணி கட்டி கையில் வைத்திருந்த குளிர்பானங்களை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.