பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்: செங்கல் உற்பத்தி பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :16 மார்ச் 2015, 12:08 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை மில்லி மீட்டரில்: பாபநாசம் அணை 22, சேர்வலாறு அணை 13, மணிமுத்தாறு அணை 4.6, கடனாநதி அணை 1, ராமநதி அணை 6, கருப்பாநதி அணை 5, குண்டாறு அணை 4, தென்காசி 9, செங்கோட்டை 10, நான்குனேரி 5, மூலக்கரைப்பட்டி 40, அம்பாசமுத்திரம் 8.2, பாளையங்கோட்டை 5.2, திருநெல்வேலி 2, சேரன்மகாதேவி 23, ஆலங்குளம் 35, ஆய்க்குடி 3.2.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், செங்கோட்டை, நான்குனேரி பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் அறுவடை பருவத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி சாய்ந்து காணப்பட்டன. பிசான பருவ அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய கிட்டங்கி வசதி இல்லாத நிலையில் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்தன. நெல் மூடைகளை விவசாயிகள் உதவியுடன் மையங்களில் இருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

செங்கல் உற்பத்தி பாதிப்பு: மழையால் அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, மூலச்சி, முக்கூடல் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் சேதமடைந்தன. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 503 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 315 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.80 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.01 அடி, மணிமுத்தாறு அணை 89.70 அடி, கடனாநதி அணை 27.40 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 24.67 அடி, அடவிநயினார் அணை 29 அடி, வடக்குப் பச்சையாறு அணை 40 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.