/

பண்ருட்டியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கோ பூஜை, கோ தானம்

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டும், வழக்கில் இருந்து விடுபட்டு மீண்டும்

News image
Updated On :20 மார்ச் 2015, 7:03 am

சீனிவாசன்

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டும், வழக்கில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராகவும், மாவட்ட அம்மா பேரவை, பண்ருட்டி அம்மா பேரவை சார்பில், திருவதிகை சர நாராயண பெருமாள் கோயிலில் 27 பசுக்களுக்கு கோ பூஜையும், கோ தானமும் நடத்தப்பட்டது.

மாவட்ட அம்மா பேரவை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொகுதி செயலர் ராமசாமி, கழக மாவட்ட துணை செயலர் முருகுமணி, பண்ருட்டி நகர செயலர் முருகன், அம்மா பேரவை செயலர் ஆர்.செல்வம், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். விழாவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.