பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை

News image
Updated On :23 மார்ச் 2015, 9:17 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸார் இரு மாணவர்களை தாக்கி உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டு்ம். மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் அமைப்பின் மாநில தலைவர் பி. உச்சிமகாளி தலைமையில் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதில் அமைப்பின் மாவட்டத் தலைவர் பி. கார்த்திக், செயலர் சி. திருமலைநம்பி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.