/

பண்ருட்டி அருகே சாலை விபத்து: தேர்வு எழுத சென்ற 10ம் வகுப்பு மாணவி படுகாயம்

பண்ட்ருட்டி அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் நித்யா (15) சிறுகிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் 10ம் வகுபு படித்து வருகிறார்.

News image
Updated On :25 மார்ச் 2015, 7:19 am

சீனிவாசன்

பண்ட்ருட்டி அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் நித்யா (15) சிறுகிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் 10ம் வகுபு படித்து வருகிறார்.

இவர் அரசுப் பொதுத் தேர்வு எழுத சேமக்கோட்டையில் உள்ள தேர்வு மையத்துக்கு  ஷேர் ஆட்டோவில் சென்ற  போது எதிரில் வந்த டாட்டா ஏஸ் வண்டி ஒன்று அந்த ஆட்டோவில் உரசி சென்றுள்ளது. இதனால் மாணவி நித்தியாவுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.