விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா உறுதிமொழி திட்டத்தின் கீீழ் பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறைகளைக் கையாளுவதற்கான பயிற்சிகள் சென்னையில் உள்ள தகவல் மற்றும் தொடர்புக்கழகம் (ஐ.சி.டி.) சார்பில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா உறுதிமொழி திட்டத்தின் கீழ், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 15 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட இரு பாலருக்கும் முதல் அணியாக 100 பேருக்கு இப் பயிற்சி ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் வங்கி ஏ.டி.எம்., கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல், மின்சாரம், தொலைபேசி, செல்போன் கட்டணங்களை கணினி மூலம் கட்டுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.