டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனைவி, மாமனார்-மாமியாரைத் தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :23 மே 2015, 2:07 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி, வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ரா.பேச்சிமுத்து. இவரது மனைவி சீதாலட்சுமி (25). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியை சந்தேகப்பட்டு அடிப்பாராம். இந்நிலையில் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்து சீதாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடித்துள்ளார்.

இதனால் அவர், குழந்தையுடன் பக்கத்துத் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். அங்கு சென்ற பேச்சிமுத்து, சீதாலட்சுமியை ஆபாசமாகப் பேசி அடித்துள்ளார்.

இதனைத் தட்டிக் கேட்ட இவரது பெற்றோரை மண்வெட்டி கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து சீதாலட்சுமி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.