அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடும்பத் தகராறு: இளம் பெண் குழந்தையுடன் தீக்குளித்து சாவு:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார்.

News image
Updated On :1 நவம்பர் 2015, 10:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார்.

இதில் இளம் பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், இந்திராநகரை அடுத்து என்.சண்முகசுந்தராபுரம் உள்ளது. இந்த இடத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி இசக்கிராணி (30). இவர்களுக்கு இரண்டரை வயதில் நித்யா என்ற பெண் குழந்தையும், ஒன்னரை வயதில் அருண்குமார் என்ற மகனும் உண்டு.

குடும்பதிதில் கணவன் மனைவிக்கிடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.30 மணி அளவில் பிள்ளைகளுக்கும், தனக்கும் மண்ணெண்ணை ஊற்றி இசக்கிராணி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதில் பலத்த காயமுற்ற மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீ சிகிச்சை காயப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு சிகிச்சை பலனின்றி இசக்கிராணியும், நித்யாவும் உயிரிழந்தனர்.

அருண்குமாருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.